Site icon

தமிழ் சினிமாவில் களமிறங்கும் நாகேஷின் பேரன்..

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்தான் நாகேஷ். பழைய காலத்து படங்களில் காமெடி என்றாலே அது நாகேஷ் தான். காமெடியில் அவரை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்கிற அளவுக்கு நகைசுவை செய்வதில் மன்னன் அவர். மேலும் இவர் பழம்பெரும் நடிகர்கள் சிவாஜி, எம் ஜி ஆர், முத்துராமன், ஜெமினி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த கடைசி படம் உலக நாயகன் கமலகாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம்.


இவர் தன்னுடைய நகைச்சுவையால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளவர். இன்று வரையிலும் காமெடி என்றால் மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது நகைசுவை மன்னன் நாகேஷ் தான். இவருக்கு பின்னால் இவருடைய மகன் ஆனந்த் பாபு தமிழ் சினிமாவில் களம் இறங்கினர். 90’s காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்த இவர் பல படங்கள் நடித்துள்ளார். பின்னர் இவருக்கு சரியான படவாய்ப்புகள் இல்லாததால் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் பின்னர் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் முத்தழகு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இவருடைய மகன் தான் பிஜேஷ் நாகேஷ். இவர் 2016 ம் ஆண்டு சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து இவர் பிரபு தேவா நடிப்பில் வெளி வந்த பொன் மாணிக்கவேல் படத்தில் நடித்திருந்தார். இது தவிர வேறு சில படங்களிலும் நடித்துள்ளார்.


தற்பொழுது நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வானரன். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பகல் வேஷம் கலை சார்ந்த ஒரு மனிதனுடைய கதையை கூறும் படமாகும். இந்த படத்தை ஸ்ரீ ராம் பத்மநாபன் இயக்கியுள்ளார். இந்த படம் ஆரஞ்சு பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. நடிகர் நாகேஷின் பேரன் நாகேஷ் மாதிரி சினிமாவில் நிலைத்து நிற்பாரா என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version