Site icon

தானாக எதுவும் பேசவில்லை…!விஜய்சேதுபதி சொல்லி தான் பேசுனராம்…! அர்னவ் போட்ட விமர்சையான பதிவுகள் …!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 கடந்த அக்டோபர் 6 ம் தேதி ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பிக் பாஸ் வீட்டிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் நடித்து சர்ச்சை ஜோடிகளான அர்னவ் மற்றும் அன்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக வந்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முதல் எலிமினேட் போட்டியாளராக ரவீந்தர் எலிமினேட் ஆனார். இந்நிலையில் இரண்டாவது வாரம் எலிமினேட் ஆவதற்கு 10 போட்டியாளர்கள் பெயர் பட்டியலில் இருந்தது. அதில் சர்ச்சை ஜோடிகளில் ஒருவரான அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார். இதற்கான காரணம் அர்னவ் அவரது முன்னாள் மனைவி திவ்யா மற்றும் அன்ஷிதா மூவரும் கான்பெரன்ஸ் காலில் பேசிய ஆடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதனை பார்த்த ரசிகர்கள் அர்னவ்க்கு ஆதரவு தராமல் ஒட்டு கம்மியாக போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளியில் வந்த அர்ணவிடம் உங்களுடைய சக போட்டியாளர்களுக்கு எதாவது கருத்து சொல்லுங்கள் என்று சொன்னார் அதற்க்கு அர்னவ் பெண்கள் அணி அழகாக விளையாடுவதாகவும். ஆண்கள் அணி ஒருவர்க்கு ஒருவர் ஜல்ரா போடுவதாகவும் பேசினார். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி உங்களுடைய கருத்தை தான் கூற சொன்னேன் உங்கள்;உங்களுடைய வன்மத்தை தெளிக்கதிர்கள் என்று சொல்லி அர்னவ்க்கு பல அட்வைஸ்களை கூறி வெளியில் அனுப்பினார். இந்நிலையில் வெளியில் வந்த அர்னவ் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் விஜய் சேதுபதி தான் அட்வைஸ் பண்ற மாதிரி பேசாதீர்கள். சும்மா அடித்து பேசுங்கள் என சொன்னதாக மீம் ஒன்றை கிரியேட் செய்து பதிவிட்டுள்ளார். பின்னர் தான் வெளியில் வந்த பொது பேசிய அனைத்தையும் மீம் மூலமாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசென்கள் அர்னவ்க்கு நெகடிவ் கமெண்ட்ஸ் குடுத்து வருகிறார்கள்.

Exit mobile version