Site icon

காதலரால் அனுபவித்த கொடுமை…! பிக் பாஸ் சௌந்தர்யா சொன்ன தகவல்…!.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி உள்ளார் நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர் வேற மாதிரி ஆபீஸ் என்னும் வெப் தொடரின் நடித்துள்ளார். மேலும் இவர் பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய விளையாட்டினை சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு பெயரை பெற்றுள்ளார்.


மேலும் இவர் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களிடம் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை குறித்து பேசிக்கொண்டிருந்தார். அதாவது அவர் 11 ம் வகுப்பு படிக்கும் பொழுதே ஒருவரை காதலித்தாராம். காலேஜ் படிக்கும் வரை இருவரும் காதலித்து வந்தார்களாம். அந்த நேரத்தில் தான் சௌந்தர்யா மாடலிங்கில் தன்னுடைய கவனத்தை செலுத்தியுள்ளார். அது அவரது காதலருக்கு பிடிக்கவில்லையாம். மேலும் அதனால் அவர் தன்னுடைய மாடலினிங் போட்டோஸ் அனைத்தையும் தன்னுடைய போனில் ஹஇக் செய்து வைத்திருந்தாராம். இந்நிலையில் அவர் அதனை ஒரு நாள் பார்த்து விட்டாராம்.

பார்த்ததும் சௌந்தர்யாவை சாஸ் பாட்டல் வைத்து தலையில் அடித்தாராம். மேலும் பலமுறை தன்னை அடித்து கொடுமை படுத்தியதாகவும் இப்படி நடந்து கொண்டிருக்க தனக்கு தன்னுடைய ஹெரியர் தான் என முடிவெடுத்து சௌந்தர்யா அவரை விட்டு பிரிந்து விட்டாராம். இவ்வாறு சௌந்தர்யா தன்னுடைய முன்னாள் காதலர் குறித்தும் அவர் அனுபவித்த கொடுமைகள் குறித்தும் சொல்லியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version