Site icon

அம்மாவுடன் செல்ல சண்டை போட்ட குட்டி தேவதை.. என்ன அழகு பாருங்க.. கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது இந்த மகிழ்ச்சி..!

குழந்தைகள் எப்போதுமே அழகானவர்கள். கருப்பு, வெள்ளை என நிறங்களைக் கடந்து குழந்தை என்றாலே அழகுதான். அதனால் தான் குழந்தைகளைப் பார்த்ததுமே ஒவ்வொருவரும் கொள்ளைப் பிரியத்தோடு நடந்து கொள்கின்றனர். அதனால் மழலைக் குழந்தைகள் செய்யும் குறும்புகளை எவ்வளவு நேரம் ஆனாலும் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

வேறு எவரும் கோபப்பட்டால் அது நமக்கும் கோபத்தை உருவாக்கும். எரிச்சலூட்டும். ஏன், சண்டை கூட சீரிய்ஸாகவே வந்துவிடும். ஆனால் குழந்தைகளின் கோபம் அப்படியானது இல்லை. குழந்தைகள் கோபப்பட்டாலும் நம்மால் வெகுவாக அதை ரசிக்க முடியும். அதனால் தான் விளையாட்டாக குழந்தைகளிடம் பலரும் கோபப்படுவார்கள். அந்தவகையில் இங்கேயும் ஒரு தாய் தன் செல்ல மகளிடம் விளையாட்டிற்காக கோபப்படுகிறார். பதிலுக்கு அந்தக் குழந்தையும் தாயிடம் படு சீரியஸாக கோபப்பட்டது போல் தனக்குத் தெரிந்த மழலை மொழியில் குரல் உயர்த்திப் பேசுகிறது.

இதோ இந்த வீடியோ இணையத்தில் இப்போது செம வைரல் ஆகிவருகிறது. தன் தாயிடம் அந்த செல்லக் குட்டிதேவதை சண்டைபோடும் காட்சியை இதோ இந்த வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.

Exit mobile version