Site icon

யானையுடன் கம்பீரமாக நடந்து வந்த பெண் குழந்தை… பார்க்க ஆயிரம் கண்கள் போதாது.. ஆனாலும் ரொம்ப தைரியம் தான்..!

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் நாய், குரங்கு, யானை ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். இவ்வளவு ஏன்? பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுடனும், லெட்சுமி மேனனிடமும் ரொம்ப நெருக்கமாக ஒரு யானை பழகியிருப்பதைப் பார்த்திருப்போம்.

இங்கேயும் அப்படித்தான். ஒரு யானை ரொம்பவும் பாசமாக ஒரு குழந்தையுடன் பழகியிருக்கிறது. அந்த யானையோடு சேர்ந்து துளிகூட பயம் இல்லாமல் செம கெத்தாக நடந்துவருகிறார் ஒரு சின்னஞ்சிறு குழந்தை. இதைப் பார்க்கவே செம கெத்தாக இருக்கிறது. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அதேநேரம் ஆனாலும் இந்தக் குழந்தைக்கு இவ்வளவு தைரியமா? எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

Exit mobile version