Site icon

டீ கடை நடத்தும் ரஜினிக்கு அம்மாவாக நடித்த பிரபல நடிகை.. வியந்து போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80’s காலகட்டத்தில் நடித்த குருசிஷியன் படத்தில் இவரும் நடிகர் பிரபுவும் சேர்ந்து நடித்திருப்பார்கள். இது அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த சூப்பர் ஹிட் படமாகும். இதனை தொடர்ந்து இருவரும் சந்திரமுகி படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். குருஷிஷியன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கவுதமியும் பிரபுவுக்கு ஜோடியாக சீதாவும் நடித்திருப்பார்கள்.

பாண்டியன், சோ, மனோரம்மா, வினுசக்கரவர்த்தி போன்றோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு அப்பாவாக செந்தாமரையும் அம்மாவாக பத்ம ஸ்ரீம் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் இளையராஜாவின் இசையம்மைப்பில் வெளிவந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். தற்போது இந்த படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்த பத்ம ஸ்ரீ அவர்கள் ஒரு டீ கடையினை நடத்தி டீ ஆத்தி வருகிறார். இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று அனைவரும் ஆச்சரியமாக பார்க்க இது குறித்து அவரிடம் கேட்டதற்கு அவரோ,

நான் டீ ஆத்துவதால் நான் எதுவும் இல்லாமல் ஏழ்மையில் இருப்பதாக யாரும் நினைத்து விடாதீர்கள் கடவுள் புண்ணியத்தில் நான் நல்லா தான் இருக்கிறேன் எனவும் சோம்பேறியாக வீட்டின் மூலையில் அடங்கிக்கிடக்க எனக்கு மனம் இல்லை அதனால் தான் உழைக்க வேண்டும் என முடிவெடுத்து 6 வருடமாக டீ கடை நடத்துவதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்ட அனைவருக்கு ஆச்சரியமாக இருந்தது இந்த வயதிலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் இவர்களை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். மேலும் இவர்களை பார்த்து இன்றய காலத்து இளைஞர்கழும் உழைத்து முன்னேற வேண்டும் என்ற கருதும் பரவி வருகிறது.

Exit mobile version