Site icon

இரண்டாம் திருமணம் யார் யாருக்கு… ஜோதிடம் சொல்வது என்ன… வாருங்கள் பார்க்கலாம்…!

இன்றய காலகட்டத்தில் இரண்டாவது திருமணம் என்பது ஒரு வேடிக்கையாகவே ஆகி விட்டது. தன்னுடைய முதல் மனைவி முதல் கணவன் இறந்தால் மட்டும் தான் மறுமணம் செய்வார்கள். ஆனால் இன்றய காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் சிறிதாக ஒரு சண்டை வந்தாலும் அதனை பேசி தீர்த்துக் கொள்ளாமல் விவாகரத்து வரை சென்று மறுமணமும் செய்து கொள்ளுகிறார்கள். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள் பெரியவர்கள். ஆனால் இன்றய காலகட்டத்தில் திருமணமோ வேடிக்கையாக அமைந்துவிட்டது.

மேலும் சில ராசிக்காரர்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது என்ன என்ன ராசி உடையவர்கள் என்று பார்க்கலாம். ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் தன்னுடைய துணையுடன் ஒத்து வாழ வேண்டும் என நினைக்க மாட்டார்களாம் துணையிடம் என்ன என்ன குறைகள் இருக்கு என்று தான் பார்ப்பார்களாம். சில சமயம் குறைகள் அதிகமாக இருந்தால் உறவை முறித்து கொள்ள கூட தயங்க ,மாட்டார்களாம். மேலும் இவர்கள் உறவை முறித்து விட்டு விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்யவும் தயார் ஆவார்களாம்.

துலாம் ராசியில் பிறந்தவர்கள் திருமண வாழ்க்கையில் துணையிடம் நல்லிணக்கம் மற்றும் சமதான நிலையை எதிர்பார்பார்களாம். தன்னுடைய எதிர்பார்ப்பு கிடைக்காத பட்சம் விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்வார்களாம்.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் துணையிடம் நிறைய எதிர்பார்ப்போடு இருப்பார்களாம். அந்த எதிர் பார்ப்பு நிராகரிக்கப்படும் போது முதல் துணையை விட்டு இரண்டாவது திருமணம் செய்வார்களாம்.

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சுதந்திர பறவையை போல் சுதந்திரமாக இருக்க ஆசை படுபவர்கள். அவருடைய சுதந்திரம் பறிக்கப்பட்டால் எத்தனை திருமணம் செய்தாலும் அது நிலைக்காதாம்.
கும்ப ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் துணையிடம் அதிக எதிர் பார்ப்புகளை வைத்திருப்பார்கள். அது நிறைவேறாத பட்ச்சம் முதல் திருமணத்தை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்வார்கள் என்று ஜோதிட சாஸ்திர படி கூறப்படுகிறது.

Exit mobile version