Site icon

அலுவலகத்திலோ,வீட்டிலோ பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பூக்களை நிரப்பிவைப்பது ஏன் தெரியுமா..? அழகுக்கு மட்டும்மல்ல….

நாம் சாதாரணமாக பார்த்துவிட்டுக் கடந்துபோகும் விசயங்களில் பல அற்புதமான அதிசயங்கள் ஒளிந்திருக்கிறது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான். வழக்கமாகவே சில வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூக்களை தொட்டிக்குள்ளோ, அல்லது வெண்கலப் பாத்திரத்திற்குள்ளோ போட்டு வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இதை வெறுமனே அழகுக்காக வைத்திருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் இதன் உண்மைக்காரணமே வேறு. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நாம் பார்க்கும் பெரும்பாலான வீடுகளில் வெண்கலப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதன்மேல் பூக்களை மிதக்க விடுவார்கள் அல்லவா? இது சீனாவில் சீனர்கள் மத்தியில் தோன்றிய வாஸ்து பரிகாரங்களில் ஒன்று.

இப்படி நம் வீட்டிலோ, அல்லது ஆபீஸிலோ செய்தால் அங்கு நிலவும் வாஸ்து பிரச்னைகள் அகலும். அதேபோல் நம்மைப் பிடித்து ஆட்டும் கண் திருஷ்டிப் பிரச்னையும் இதில் போய்விடும். இதேபோல் நம்மை நோய், நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வைப்பதிலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. பிறகென்ன இனிமேல் நீங்களும் உங்கள் வீட்டில் வெண்கலப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பீர்கள் தானே?

Exit mobile version