Site icon

சண்டை போட்டே பாடாய்படுத்தும் ராசி இவர்கள் தான்… இந்த ராசிக்காரங்களை கட்டுறவங்க ரொம்ப பாவம்..!

சில தம்பதிகளுக்கு இடையில் ஏன், எதற்கு என்றே தெரியாது. சதா சர்வநேரமும் சண்டை வந்துகொண்டே இருக்கும். இத்தனைக்கும் அவர்களுக்கு இடையில் அவ்வளவு பெரிய சண்டைக்கான எந்த சாத்தியக்கூறுமே இருக்காது. ஆனாலும் விடாமல் துரத்தும் சண்டைக்கு அவர்களின் ராசி மட்டுமே காரணம் ஆகும்.

இங்கே அந்த ராசி யாரெல்லாம் எனப் பார்ப்போம்..

கடகம்..

கடகராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடியவர்கள். அதனால் இவர்களிடம் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பேச வேண்டும். இந்த பண்பு அவர்களுக்குள் எப்போதும் வெடிப்பை உருவாக்கலாம். நீங்கள் ஏதேனும் வகையில் அவர்களை காயப்படுத்தினால் பல மாதங்கள், வருடங்கள் கழித்தும் கூட அது அவர்கள் மனதை விட்டு அகலாது. அதனால் மீண்டும், மீண்டும் சண்டை வரலாம்.

மிதுனம்

இவர்கள் கணிப்புக்கு அப்பாற்படவர்கள். எப்போதுமே இவர்களது மனநிலை மாறுபடும். அவர்கள் அமைதியாகவோ, அல்லது உணர்ச்சிகரமாகவோ இருக்கும்போது அவர்களைத் தொந்தரவு செய்தால் அதற்கு அவர்கள் ரியாக்சனை யூகிக்கவே முடியாது. இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அது ஒருநாளும் தீராது. உங்கள் காதுகளில் சண்டையாக கேட்டுக் கொண்டே இருக்கும்.

விருச்சிகம்

எந்த ஒரு விவாதத்தில் தங்களை நேர்த்தியாக விருச்சிக ராசிக்காரர்கள் தற்காத்துக் கொள்வார்கள். அவர்களோடு சண்டையிட்டால் அடுத்தவரை மிகவும் காயப்படுத்தும் விசயத்தை சொல்வார்கள். இது அதிக கோபத்தைத் தரும். அதனால் விருச்சிக ராசிக்காரரிடம் தாம்ரை, இலை தண்ணீர் போல் பட்டும், படாலும் இருக்கவேண்டும்.

ரிஷபம்..

இயல்பிலேயே இவர்களுக்கு பிடிவாதக்குணம் அதிகம். அவர்களே தவறு செய்திருந்தாலும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

சிம்மம்

இவர்களுடன் கருத்து, வேறுபாடு என வந்துவிட்டால் உங்களுக்கு நேரடி எதிரியாக நிற்பார். சாதாரணமாக முடியும் ஒரு விசயத்தைக் கூட மிகைப்படுத்தவும், தீவிரப்படுத்தவும் ஒரு வழியைத் தேடுவார். இவர்களிடம் சண்டையை முடிவுக்கு கொண்டு வர மன்னிப்பு கேட்பது மட்டுமே தீர்வாகும்.

Exit mobile version