சூர்யா விஜய் சேதுபதியின் பாக்கெட்மணி பேச்சு… கலாய்க்கும் நெட்டிசென்கள்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிகராக தான் நடிப்பேன் என்று கூறாமல் எந்த கேரக்டர் குடுத்தாலும் அதற்க்கு ஏற்றவாறு நடிப்பார். பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். பல வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். இவருடைய மகன் தான் நடிகர் சூர்யா விஜய் சேதுபதி. இவர் சிந்து பாத் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். அந்த படம் இவருக்கு பெரிதளவில் வெற்றியினை கொடுக்கவில்லை. தோல்வியினை கொடுத்த அந்த படத்திற்க்கு பின்பு சினிமாவில் சிறிது காலம் இடைவெளி விட்டார்.

தற்போது விடுதலை 2 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அவர் அனல் அரசு இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு வீழான் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் நவம்பர் 14 ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு வரும் அதற்கான பணியையும் சிறப்பாக ஆற்றிவருகிறார்.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் எங்கப்பா தினமும் எனக்கு பாக்கெட் மணியாக ரூபாய் 500 தான் கொடுப்ப்பார் எனவும் அதை வைத்து தான் நான் தினமும் செலவு செய்வேன் எனவும் கூறி உள்ளார். அதற்க்கு நெட்டிசென்கள் ஸ்கூல் படிக்குற உனக்கு 500 ரூபாய் ஓவர் தானப்பா என்று கலாய்த்து வருகிறார்கள்.

You may have missed