இயக்குனராக உருவெடுக்கும் இளம்புயல் ஜெயம்ரவி…. முதல் பட ஹீரோவே இவரா…!!

ஜெயம் படத்தின் மூலம் ஹிட் அடித்து இளம்புயல் என பெயரெடுத்த ஜெயம் ரவி அவர்கள் புதிதாக படம் இயக்க போவதாக தகவல் வெளி வந்துள்ளது.வருகிற தீபாவளி அன்று இவரின் நடிப்பில் பிரதர் மூவி வெளி வர இருக்கும் நிலையில் இப்பொது இப்படி நியூஸ் கசிந்துள்ளது.

சமீபகாலமாக இவரின் சொந்த பிரச்சனை பற்றி சமூக வலைத்தளத்தில் பல பார்த்திருப்போம்.இவருக்கும் இவரின் மனைவி ஆர்த்திக்கு டிவோர்ஸ் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது.இதை பற்றி அவரிடம் கேட்டபொழுது படத்தில் நான் தவறு செய்தாலோ இல்லை ஏதாவது நடிப்பில் மாற்ற வேண்டுமானாலோ என்னிடம் கூறுங்கள் நான் கேட்பேன்.ஆனால் எனது சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறி இருந்தார்.

இப்பொழுது இவர் இயக்குனராக போகும் நிலையில் இவரின் படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளியான கோமாளி மிகப்பெரிய வெற்றியே கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதை தொடர்ந்து ஜெயம் ரவி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படத்தை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளார்கள்.

You may have missed