வாவ்! சூப்பர்! ரசிகர்களுக்கு செம நியூஸ் சொன்ன ஹன்சிகா…அன்பு மழையில் வாழ்த்தும் ரசிகர்கள்…!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. எங்கேயும் காதல் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகை ஹன்சிகா தமிழில் மட்டும் அல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் எங்கேயும் காதல் என்ற படத்தினை தொடர்ந்து தனுஷுடன் மாப்பிள்ளை, விஜயுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை, ,மான்கராத்தே என தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இருப்பினும் எல்லா மனிதர்களுக்கும் சறுக்கல் ஏற்படுவது போல அவருக்கும் சினிமாவில் சறுக்கல் ஏற்பட்டது.

வெற்றி படங்களை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வியையே கண்டன. மேலும் அவர் நடித்த 50 வது படம் மகா அதனை அவர் அதிகமாக எதிர்பார்த்து இருந்தார் அதுவும் தோல்வியை கண்டது. இதன் பின்னர் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து அவரது நெருங்கிய நண்பரான ஷோஹெல் கட்டாரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. பல சினிமா பிரபலங்கள் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஹன்சிகா தற்போது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய ரசிகர்கள்ளுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லி உள்ளார். தன்னுடைய கணவருடன் தன்னுடைய புதிய வீட்டில் குடியேறிய போட்டோஸ் மற்றும் புது வீட்டில் யாகம் நடத்திய போட்டோஸ் என அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள் .

pic1

pic2

pic3

pic4

pic5

pic6