ஜாலியாக ராட்டினம் ஆடிய மக்கள்… திடீரென கீழே விழுந்து தூக்கி வீசிய மக்கள்.. இணையத்தில் பரவும் காணொளி..

நம்முடைய சின்ன வயதில் ராட்டினத்தில் பயணிக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் அப்போது வயது குறைவானவர்கள் ராட்டினத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படும்.

ராட்டினம் என்றாலே வயிற்றுக்குள் ராட்டினமும் சுற்றும். அந்த பெரிய ராட்டினம் உயர செல்லும் போது பயமாக இருக்கும் அதைவிட கீழே வரும்போது அதற்க்கு மிச்சமாக பயம் வரும். அப்படி ஒரு ராட்டினம் மேலே எப்பொழுதும் போல சுழன்று சென்று பின்னர் கீழே வரும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து பாதிப்பிற்குள்ளானது. அதில் இருந்த 50 பேர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் மொகாலியில் உள்ள கண்காட்சி நிகழ்ச்சியில் நடந்துள்ளது.

இந்த நிகழ்வானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.