குழந்தைக்கு பெயர் வைத்த போது நடந்த அக்கப்போரு.. சந்தோசமான நிகழ்வில் ஒரு குடும்பமே பிரிஞ்சுடுச்சே..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள்.

இங்கே கேரளத்தில் ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். குழந்தைக்கு யார் பெயரை சூட்டுவது என தம்பதியருக்குள் கருத்து மோதல் இருந்தது. கணவர் ஒரு பெயரையும், மனைவி ஒரு பெயரையும் சொல்ல இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்தது. இந்நிலையில் பெயர் சூட்டும் தருணத்தில் மாப்பிள்ளை தன் மனதுக்குப் பிடித்த பெயரைச் சொல்ல மனைவியோ வெடுக்கென குழந்தையைப் பிடுங்கி, அவருக்கு இஷ்டமான பெயரை சத்தமாக சொன்னார்.

ஒருகட்டத்தில் குழந்தையின் பெயர் சூட்டுவிழா நிகழ்ச்சி கலவர வீடாகிப் போனது. ஒரு பெயருக்காக இவ்வளவு பெரிய அக்கப் போரா? என நெட்டிசன்கள் இதைக் கலாய்த்து வருகின்றனர்.

You may have missed