அடையாளமே தெரியாமல் மாறிய தாஸ் பட நடிகை.. தற்போது என்ன தொழில் செய்யுறாங்க தெரியுமா?

தமிழ்த்திரையுலகில் நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு நீடித்த காலம், நடிகைகளுக்கு இருப்பதில்லை. ரஜினி, கமல், சத்யராஜ் என பலரும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இயங்கி வருகின்றனர். இன்றும் அவர்களுக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் நடிகைகளின் காலம் அப்படியானது அல்ல. அதிலும் திருமணம் முடிந்துவிட்டால் மார்க்கெட் டவுண் ஆகிவிடுகிறார்கள். அப்படித் தமிழுக்கு வந்த வரவு தான் ரேணுகா மேனன். பரத் நடித்த பிப்ரவரி 14, ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் ஆனால் போதிய கவர்ச்சி காட்டாததால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் கலிபோர்னியாவில் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலானார்.

கலிபோர்னியாவிலேயே நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு சினிமா நடனமும், பாரம்பர்ய நடனமும் தனித்தையே கற்றுக்கொடுக்கப்படுகிறது. தற்போது இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் ஒரே போல் உடை அணிவித்து இவர் அவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடவே அடடே நடிகை இப்படி ஆளே மாறிட்டாரே எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.புகைப்பட இணைப்பு கீழே..

pic1

pic2

pic3

You may have missed