சுற்றுலா பயணி செய்ததை பார்த்து மனிதர்களைப் போலவே விழுந்து, விழுந்து சிரித்த குரங்கு… அப்படி என்ன செய்தார் தெரியுமா..!

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போதும் அதில் அப்படியே மனிதர்களின் சாயல் இருக்கும். அதேநேரத்தில் குழந்தைகள் சேட்டை செய்யும் போது உனக்கு இன்னும் வால் மட்டும் தான் முளைக்கல எனவும் சொல்வதைக் கேட்டிருப்போம்.

அந்த அளவுக்கு மனிதன், குரங்கு இருவரும் ஒத்த தன்மையைக் கொண்டவர்கள் தான். மனிதனுக்கு ஆறு அறிவு. குரங்குக்கு ஐந்தறிவு என்பதைத் தாண்டி பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போகும் தன்மை கொண்டவையே. ஆனால் இப்போதுகுரங்குக்கும் ஆறு அறிவு இருக்குமோ என சந்தேகப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா?

உயிரியல் பூங்கா ஒன்றில் ஓராங்குட்டான் இன குரங்கு ஒன்று கண்ணாடி கூண்டில் இருந்தது. அங்கே போன வாலிபர் ஒருவர் குரங்கின் முன்பு ஒரு மேஜிக்கைக் காட்டுகிறார். அதாவது டம்ளருக்குள் ஒரு பொளை போட்டுக் கொண்டு குரங்கு முன்பு குலுக்குகிறார். குரங்கு கண் இமைக்கும் நொடியில் அந்த பொருளை ஒளித்து வைத்துவிட்டு வெறும் டம்பளரையும், மீண்டும் டம்ளரில் பொருள் இருப்பதையும் காட்ட மனிதர்களைப் போலவே குரங்கும் விழுந்து, விழுந்து சிரிக்கிறது. இப்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…நீங்களே பாருங்கள்…

You may have missed