நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பாராட்டிய நடிகர் அஜித்…மேடையில் புகழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்…!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் தன்னுடைய காமெடி மற்றும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தியும் சிறு சிறு கதாபாத்திரங்களில் வெளிவந்தவர். இவருடைய திறமையால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்திருக்கும் படம் அமரன்.

இந்த படத்தில் அமரணாக சிவகார்த்தியன் நடிக்கிறார். அமரனின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆக நடிக்கிறார் சாய்பல்லவி. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள காதல் இந்த படத்தில் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் அஜித் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

அதாவரது நண்பர் ஒருவரின் தீபாவளி கெட் டுகெதர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தாராம். அங்கு கதவை திறந்து பார்த்தால் நடிகர் அஜித் அங்கு இருந்தாராம். அவர் அப்போது சிவகார்த்திகேயனை பார்த்து welcome to the big league என கை கொடுத்து கூறினாராம். உன் வளர்ச்சியை பார்த்து மற்றவள்கள் இன்செக்கியூர் ஆகிறார்கள். welcome to the big league என்று கூறினாராம். இதனை அமரன் இசை வெளியிட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் நடிகர் அஜித்தை புகழ்ந்து கூறி உள்ளார்.

You may have missed