நடிக்கும் போதே என்னுடைய மூச்சு நிற்க வேண்டும்…!வாழ்நாள் கனவு இது..! ஷாருக்கானின் நெகழ்ச்சியான பேச்சு…!

பாலிவூட் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் ஷாருக் கான். இவர் உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல தடயங்களை தாண்டி தன்னுடைய கடும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர். மேலும் இவர் சின்னத்திரையில் இருந்து படி படியாக தன்னுடைய நடிப்பின் மூலமாக வெள்ளித்திரைக்கு வந்தவர். இன்று பாலிவூட் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல வெற்றி படங்களுக்கு சொந்த காரர் ஆவார்.

சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தவான் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லொகோர்னோ படத்தின் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வாங்கும் முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரையே சேரும்.

அந்த விருதை வாங்கிய ஷாருக்கானிடம் நீங்கள் எப்போதும் ஒரு நடிகனாக நடித்து கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்க்கு அவர் ஆமாம் என்னுடைய வாழ்நாள் முடியும் வரை நான் நடிக்க வேண்டும் என கூறி உள்ளார். மேலும் ஆக்சன் சொல்லும் பொது நான் இறப்பது போன்று நடிக்க வேண்டும் கட் சொல்லும் போது உண்மையாகவே நான் இறந்துருக்க வேண்டும்.நடிக்கும் போதே என்னுடைய மூச்சு நிற்க வேண்டும்.வாழ்நாள் கனவு இது.என்று ஷாருக்கான் நெகழ்ச்சியாக பேசியுள்ளார்.

You may have missed