நடிகர் பாண்டியராஜனின் அழகிய குடும்பம்… யாரும் பார்த்திராத குடும்ப புகைப்படங்கள்..!

நகைச்சுவை நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழில் அறிமுகமே தேவை இல்லை. ஆண் பாவம் படம் இப்போதும் பலருக்கு பேவரட் திரைப்படமாகவே உள்ளது. நடிப்பு, இயக்கம் என இரு துறைகளிலும் ஜொலித்தவர் பாண்டியராஜன்.

மிக எளிமையான குடும்பப் பிண்ணனியில் பிறந்த பாண்டியராஜன் தன் இடைவிடாத உழைப்பால் முன்னுக்கு வந்தவர் ஆவார். அவர் அளவுக்கு அவரது வாரிசுகள் சினிமாவில் பெரிதாக சோபிக்கவில்லை. நடிகர் பாண்டியராஜன் ரிக்கார்டிங் நேரங்களில் அல்வா சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதுபற்றி ஒருமுறை நடிகரும், சினிமா ரிப்போர்ட்டருமான பயில்வான் ரங்கநாதன் கூறும்போது, ‘அவர் அப்படி அல்வா சாப்பிட்டுப் பேசினால் குரல் நச்சென வரும் என சொல்லுவார். அதேபோல் அவர் சின்ன வயதில் அதை சாப்பிட வசதியின்றி தவித்தார். இப்போது வசதி இருக்கிறது. சாப்பிடுவோமே..’எனக் காரணம் சொல்வார் என பாண்டியராஜன் பற்றி பேசியிருந்தார்.

பாண்டியராஜன் கன்னிராசி படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் ஆனார். ஆண்பாவத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்போதும் கூட நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று செய்துவருகிறார். கடந்த 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பாண்டியராஜனுக்கு, ப்ரித்வி ராஜன், பல்லவராஜன், பிரேம் ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில் பிரித்வி ராஜன் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.

இப்போது பாண்டியராஜனுக்கு அண்மையில் 60 ஆம் கல்யாணம் நடந்துள்ளது. அப்போது அவரது மனைவி, மூன்று மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

pic1

pic2

pic3

You may have missed