தனக்கு வரும் ஆபத்தை முன்னரே கணித்துவிடும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.. உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..

சிலர் ஆபத்து வருவதை முன்கூட்டியே கணித்து விடும் ஆற்றல் பெற்றவர்கள். இவ்வளவு ஏன் இப்படியான ஒரு கதையம்சத்தை மையமாகக் கொண்டே வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வெளியானது. இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிலருக்கு இயல்பிலேயே நடக்க இருக்கும் ஆபத்தை அவர்களின் உள்ளுணர்வு சொல்லிவிடும். அதை அவர்களால் உணரவும் முடியும். அது எந்த, எந்த ராசியினர் என்பதை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

மகரம்..

பொதுவாகவே நெகட்டிவாக ஏதும் நடக்கப் போகிறது என்பதை இவர்கள் எளிதில் உணர்ந்துவிடுவார்கள். இவர்கள் மனம் சொல்வதை விட தங்கள் உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.

துலாம்

இவர்களுக்கும் தங்களைச் சுற்றி நடப்பது உள்ளுணர்வினால் தெரியும். இவர்கள் இப்படி தெரிவதாலேயே எந்த சிக்கலில் இருந்தும் எளிதில் மீண்டுவிடுவார்கள்.

விருச்சிகம்

இவர்களுக்கு தெரியாமல் மற்றவர்கள் எதையுமே மறைக்க முடியாது. இவர்களின் உள்ளுணர்வு இவர்களுக்கு இந்த ஆற்றலைக் கொடுத்துள்ளது. அதனால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றவும் முடியாது.

மீனம்

ஏதாவது அசாதாரணமாக நிகழப் போகிறது என்றால் இவர்களது உள்ளுணர்வுக்கு அது தெரியும். எந்த ஆபத்தையும் இவர்கள் இதனால் உணர்ந்து கொள்வார்கள்.

கடகம்

இந்த ராசிக்காரர்களும் எதிர் தரப்பினர் வாயைத் திறந்து பேசும் முன்னரே அவர் ஆழ்மன ரகசியங்களையும் புரிந்துகொள்வார். இவரையும் யாரும் ஏமாற்ற முடியாது.

You may have missed