இந்த சிறு குழந்தைக்கு இப்படி ஒரு திறமையா… ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மழலை… வீடியோ பாருங்க அசந்திடுவீங்க..!

கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் புத்திக்கூர்மை அனைவரையும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

ஒருவயது கூட முழுதாக நிரம்பாத அந்தக்குழந்தை கிளி, பாம்பு, காகம், மாடு, கோழி, ஆடு, நாய், பூனை,யானை என ஒவ்வொரு மிருகமும் எப்படிக் கத்தும் எனக் கேட்க,. அந்த மிருகங்களுக்கே உரிய மேனரிசத்தோடு குரல் எழுப்பி ஆச்சர்யப்படுத்துகிறது. லட்சம் பேர் பார்த்து ரசித்த அந்த வீடியோ இதோ…நீங்களும் பாருங்கள். கடைசியில் அந்த சிரிப்பு வேற லெவல்…

You may have missed