முதுகுவலியை சுலபமாக விரட்ட இதை குடித்தாலே போதும்… பஞ்சாய் பறந்துவிடும்..

நீங்கள் தினமும் முதுகு வலியால் கஷ்டப்படுகிறீர்களா? அப்ப தினமும் இத குடிங்க, உங்க வலி பஞ்சா பறந்து போகும்.

பெரும்பாலான மக்களுக்கு கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்களால் எந்த ஒரு கனமான பொருளையம் தூக்க இயலாது.

மேலும் சிலரால் நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ முடியாது. சிலருக்கு முதுகு, இடுப்பு மற்றும் கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும். இந்த வகையான முதுகு வலி இடுப்பு மூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள பிரச்சனையால் ஏற்படுகின்றது.

இவ்வாறு வரும் முதுகு அல்லது இடுப்பு வலியை சுலபமாக விரட்ட இந்த இயற்கையான பானத்தைக் குடித்தால் போதும். வலிகள் பஞ்சாக பறந்துவிடும். இந்த அற்புதமான இயற்க்கை பானத்தை செய்வது எப்படி என்று கீழே பார்ப்போம்;

தேவைபடும் பொருட்கள் :

1,பால் – 200 மிலி

2,பூண்டு – 4 பற்கள்

தயார் செய்யும் முறை:

முதலில் பாத்திரத்தில் 200 மிலி அளவு பாலை ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, மிதமான சூட்டில் சில நிமிடங்கள் பூண்டு வேகும்வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

குடிக்கும் முறை:

இந்த பாலினை தினமும் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால், இடுப்பு மற்றும் முதுகு வலி சற்று குறைந்து வருவதை நீங்களே உணர்வீர்கள். வலி முழுமையாக போய்விட்டால், இந்த பாலினை குடிப்பதை நிறுத்தி விடவும்.

நன்மைகள்:

இந்த இயற்கை பானம் நேரடியாக இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும். மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் அதிகம் உள்ளது. விருப்பமுள்ளவர்கள், இந்த பானத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

சிறு குறிப்பு:

இந்த பானத்தை குடிப்பதோடு மட்டுமல்லாமல் இடுப்புமூட்டுக்குரிய நரம்பு வலியைக் குறைக்க உதவும் உடற்பயிற்சியையும் செய்து வந்தால், இன்னும் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

You may have missed