கொஞ்சம் பெரிய பிரச்சனை தான் போல… பாட்டியோடு க்யூட்டாக சண்டை போட்ட குட்டிக் தேவதை.. முடிவில் என்ன நடக்குதுன்னு பாருங்க..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஒரு குட்டிக்குழந்தை தன் செல்லப் பாட்டியுடன் செம க்யூட்டாக சண்டை போடுகிறது. தன் மழலை மொழி மாறாமல் அந்தக் குழந்தை பாட்டியுடன் சண்டை செய்ய, பாட்டியும் பதிலுக்கு செல்லக்குழந்தையோடு விளையாடும் நோக்கத்தில் சண்டை செய்கிறது. கடைசியில், குட்டிக்குழந்தை ஒருகட்டத்தில் கோபமாகி, பாட்டியின் கண்ணைக் குத்திவிட்டது. இந்த குட்டிக்குழந்தையின் க்யூட்டான கோபம், இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

You may have missed