தன் குட்டிகளோடு ஓடி ஒழிந்து கண்ணாமூச்சி விளையாடிய தாய் வாத்து.. என்ன ஒரு க்யூட்டான நிகழ்வுன்னு பாருங்க..!

பாசமும், அறிவும் மனிதர்களுக்கு மட்டும் ஆனது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதனுக்கு இணையாக சில நேரங்களில் பறவையினங்களும் கூட அறிவார்ந்தமாக இயங்குவதைப் பார்த்திருப்போம். இது அப்படியான ஒரு வாத்தின் சம்பவம் தான்!

வாத்துகள் மெதுவாக நடப்பதே மிக அழகாக இருக்கும். அதேபோல் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு தன்மையும் வாத்துக்கு உண்டு. அது நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. தண்ணீர் நிறைந்த குளத்திலோ, ஆற்றிலோ அது நீந்தி செல்வதே பார்க்க அழகாக இருக்கும்.

இங்கேயும் வாத்து ஒன்று தண்ணீரில் தன் குட்டிகளோடு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வாத்து தண்ணீரில் தன் முழு உடலையும் முழ்க செய்து, இன்னொரு பகுதி வழியாக வெளியே வருகிறது. குழந்தைகள் விளையாடும் கண்ணாம்பூச்சி விளையாட்டைப் போல இது பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. குட்டி வாத்துக்களோ தன் தாய் வாத்தைத் தேடி தண்ணீருக்குள் தேடுதல் வேட்டை நடத்துகிறது. இது வெறுமனே விளையாட்டு போல் தோன்றினாலும் தன் குட்டிகளுக்கு தண்ணீருக்குள்ளும் வாழும் பயிற்சியை இதன் மூலம் கொடுக்கிறது வாத்து. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

You may have missed