ரோட்டில் நின்றாலும், காருக்குள் இருந்தாலும் தாய் பாசத்துக்கு முன் பணம் ஒரு விசயமே இல்லை என உணர்த்திய பதிவு..

‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!

மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.

எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் ஒரு பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அதை அப்படியே கண் முன்பு கொண்டுவந்து நிறுத்துவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. குறித்த இந்தக் காட்சியில் காருக்குள் இருந்தவாறு ஒரு தாய் தன் குழந்தையைக் கொஞ்சுகிறார்.

அதேநேரத்தில் காருக்கு வெளியே சாலையில் பஸ் ஏற காத்திருக்கும் ஒரு பெண்ணும், தன் குழந்தையை பாசத்தோடு கொஞ்சி மகிழ்கிறார். குறித்த இந்தக் காட்சியில் ஒரு ஏழைத்தாய் தன் குழந்தையைக் கொஞ்சுவதும், அதேநேரத்தில் வசதி படைத்த தாய் காரில் இருந்து கொஞ்சுவதையும் அச்சு அசலாக பதிவு செய்துள்ளது. இது நம்மையும் அறியாமல் தாய் பாசத்தின் உச்சத்தை சொல்கிறது. இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்கள்.

You may have missed