35 வயதாகியும் திருமணம் செய்யாமல் செய்யாமல் இருக்கீங்களா.. உங்களுக்கான பதிவு தான் இது..!

ஆண்கள் 30 வயதைக் கடந்துவிட்டாலே பெண் கிடைப்பது மிகக் கஷ்டம். ஆனால் பெண்களில் சிலர் 35 வயதை நெருங்கியும்கூட திருமணம் செய்யாமலே வாழ்வை நகர்த்துகின்றனர். அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து இந்தப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த காலத்துப்பெண்கள் படிப்பு, வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதேநேரம் அதில் வெற்றிபெற்றவர்கள் தங்கள் திருமண்ஞ ஆசையை தள்ளிப்போட்டு சுதந்திரப் பறவையாகவே இருக்க விரும்புகின்றனர். அதிலும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் பலரும் நகர்ப்புறத்தில் வாழ்பவராக இருக்கிறார்கள். நகர்ப்புற வாழ்க்கை அவர்களுக்கு திருமண பந்தத்தின் மேன்மையையும் உணர்த்துவதில்லை.

21 வயதில் திருமணம் செய்யாமல் சுய விருப்பத்தோடே வாழ பழகியப் பெண்கள் 35 வயதாகும் போது அதுவே பழகிப்போய் இருக்கும். படக்கென யாரோடும், யாருக்காகவும் தங்கள் வாழ்வை விட்டுக்கொடுக்க அவர்களுக்குத் தோன்றுவதில்லை. இதனாலும் அவர்கள் திருமணத்தில் கமிட் ஆவதில்லை. தனிமையின் சுதந்திரம் நினைத்த இடத்துக்கு போக, வர, தன் சுய விருப்பப்படி செயல்பட அனுமதிப்பதால் அதை விரும்பும் பெண்களும் அதிகம்.

சுதந்திரமாகவே 35 வயது வரை வாழ்ந்துவிட்டு இன்னொருவருக்காக தன் முடிவுகளை மாற்ற வேண்டி இருப்பதாலும் பலரும் திருமணம் செய்துகொள்வதில்லையாம். மனதிற்கு பிடித்தவற்றை செய்வதும், மனதுக்கு பிடித்தவருடன் ரிலேசன்ஷிப்பில் இருப்பதும் பெருநகரங்களில் 35 வயதிலும் பெண்கள் சிலர் திருமணம் செய்யாமல் இருப்பதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது. மிக..முக்கியமானது இது சில பெண்களுக்கான பதிவுதான். குடும்ப பாரத்தை சுமக்கவே தங்கள் திருமணத்தை தியாகம் செய்த பெண்கள் தெய்வங்களுக்கு சமமானது.

You may have missed