நடிகர் சிம்பு தக் லைஃப் படத்திற்கு பிறகு மாஸ் என்ட்ரி கொடுக்க இருக்கும் புதிய படம்..!

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிம்பு. இவர் தன்னுடைய தந்தையின் வழியாக சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்பை வெளிபடுத்தி வருபவர். மேலும் இவர் நடிப்பில் மட்டும் இன்றி நடனத்திலும் பெயர் பெற்றவர். தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு கூட்டம் ரசிகர்கள் உண்டு. விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். மேலும் இவர் நிறைய வெற்றி படங்களை கொண்டிருந்தாலும் தோல்வி அடைந்த படங்களும் உண்டு. ஆனாலும் தன்னுடைய தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் அடுத்து வெற்றி படங்கள் கொடுப்பதற்கு முயற்சி செய்பவர்.

மேலும் சினிமாவில் எப்போதும் தொடர்ந்து தன்னுடைய முயற்சியை ஈடுபடுத்தி கொண்டு இருந்தால் மட்டும் தான் இயக்குனர்களும் தேடி வந்து படம் கொடுப்பார்கள். மேலும் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடிக்க முடியும். மாநாடு பட வெற்றிக்கு பின் தணிந்தது காடு ,பத்து தல போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

அதனை தொடர்ந்து சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் பட இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக இருந்தது. இந்த படத்தை தயாரிக்க அதிக அளவில் பட்ஜெட் ஆகும் என்பதால் கமல் இதில் இருந்து பின்வாங்கினர். மேலும் இதனை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் சிம்புவை நடிக்க வைத்தனர். இது சிம்புவின் 48 வது திரைப்படம். இந்த படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியது.

மேலும் இந்த படத்திற்கு பின்பு ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தினை நடிக்க இருக்கிறார் சிம்பு. இந்த படத்தை முடித்த பின்பு சிம்புவின் 50வது படத்தினை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய 50வது படத்தினை சிம்புவே இயக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் சிம்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.