பெற்ற பிள்ளையிடம் குடித்து விட்டு செய்யும் தகராறு… சிறுத்தை சிவாவின் தம்பி மீது புகார்..!

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பிதான் நடிகர் பாலா. தென்னிந்திய மொழி படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் தான் பாலா. இவர் அன்பு என்னும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதனை தொடர்ந்து காதல் கிசு கிசு என்னும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாளத்தில் மிகவும் பிரபல பின்னணி பாடகியான அமிர்தாவை காதலித்து வந்தார். மேலும் இதற்க்கு பாலாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்க வில்லை என்ற போதிலும் தன்னுடைய வீட்டை எதிர்த்து பாடகி அமிர்தாவை கடந்த 2010 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பாலா குடித்து விட்டு தன்னுடைய மனைவியான அமிர்தாவை தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. அதனால் அவருக்கும் இவருக்கும் இடையில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாகவும் தெரியவருகிறது. இதன் பின்னர் பாலா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவ்வப்போது தன்னுடைய முன்னாள் மனைவியான அமிர்தாக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. அது மட்டும் இல்லாமல் தன்னுடைய 12 வயது மகளை அவ்வப்போது வழிமறித்து தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் பொறுத்து கொள்ள முடியாமல் ஆத்திரம் அடைந்த அவரது முன்னாள் மனைவி அமிர்தா கேரளா மாநிலம் கொச்சினில் உள்ள காவல் நிலையத்தில் தனக்கும் தன்னுடைய பெண் குழந்தைக்கும் அவர் தொந்தரவு தருவதாகவும் கூறியுள்ளார். இதனால தான் மன உளைசலுக்கு ஆளாகி வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் நடிகர் பாலா அவரது மேலாளர் மற்றும் பிலிம் பாக்டரி நிறுவனர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த நெட்டிசென்கள் சிறுத்தை சிவாவை பார்த்து தங்களது ஆசை தம்பியை கண்டித்து வைக்க மாட்டிர்களா என்று தங்களது பதிவினை வெளியிட்டு வருகிறார்கள்.

You may have missed