உடம்பில் உருவாகும் மரு நிரந்தரமாக போகணுமா.. இதை மட்டும் செய்யுங்க போதும்..

நம் உடலில் மருக்கள் அவ்வப்போது தோன்றும். ஆனால் பருக்களாவது குறிப்பிட்ட காலம் இருந்துவிட்டு போய்விடும். ஆனால் மருக்கள் அப்படி போகாது. அவை நம் அழகையும் கெடுத்துவிடும். ஆனால் இந்த மருவை ஒரு இயற்கை மருத்துவத்தின் மூலமே போகவைத்து விடலாம். அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முதலில் ஒரு வெற்றிலையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் காம்பு பகுதியை அதை ஒட்டியிருக்கும் கொஞ்சம் இலையோடு சேர்த்து கட் செய்து கொள்ள வேண்டும். வெற்றிலைக்காம்பில் கொஞ்சம் சுண்ணாமை தடவிக்கொள்ள வேண்டும்.

இப்போது இதை மரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். அதாவது வெற்றிலைக்காம்பில் எடுத்து சுண்ணாம்பை இருநிமிடங்களுக்கு மரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.

இதற்கு நிச்சயமாக வெற்றிலை காம்பைதான் உபயோகிக்க வேண்டும். காரணம் அதில் தான் ஆண்டி பாக்டீரீயாக்கள் இருக்கிறது. அதனால் தான் வெற்றிலை காம்பை உபயோக்கிறோம். இதை இரண்டு, மூன்று முறை செய்தாலே மரு உதிர்ந்து விழுந்துவிடும். நம் முன்னோர்கள் இந்த முறையை பயன்படுத்தித்தான் மருக்களை போக்கி இருக்கின்றனர். நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்களேன்.

You may have missed