பார்வையிலேயே மயக்கும் 5 ராசிக்காரர்கள் இவர்கள்தான்.. உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் அந்த திருமண வாழ்வு எல்லாருக்கும் இனித்துவிடுவதில்லை. இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் எல்லாம் மதுரை மீனாட்சி ஆட்சிதான் என கேஸ்வலாக சொல்வதைக் கேட்டிருப்போம். அதன் அர்த்தம் வீட்டில் மனைவியின் கை ஓங்கியிருப்பதைக் குறிக்கும்.

சரி, யாரெல்லாம் தங்கள் மனைவி தொடங்கி, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் வரை பார்வையிலேயே மயக்கிவிடுவார்கள் தெரியுமா? இவர்களிடம் மற்றவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்.

மேஷம்

நேர்மறை குணம் அதிகம் உள்ள இவர்கள் மற்றவர்கள் மீது ஆழமான செல்வாக்கைப் பெறுவார்கள். இவர்கள் மற்றவர்களை எளிதாக ஈர்ப்பார்கள். இவர்களின் உலகை இவர்களே வடிவமைத்துக் கொள்வார்கள். இவர்களின் வார்த்தைகள், மற்றவர்களிடம் தாக்கம் ஏற்படுத்தும். வாழ்வில் கீழே விழுந்தாலும் எழுந்துநின்று தங்களுக்கு சாதகமான அம்சத்தைத் தேடுவார்கள். இவர்களது செயல்கள் மற்றவர்களை வெகுவாகக் கவரும். இவர்களும் பார்வையிலேயே மற்றவர்களை மயக்கக் கூடியவர்கள்.

ரிஷபம்

இலக்கை அடைய அபரிமிதமாக உழைப்பார்கள். என்னதான் தடைகள் வந்தாலும் அதை தகர்த்து எறிந்துவிட்டு முன் நகர்வார்கள். இயல்பிலேயே அதிக பிடிவாத குணமும் இவர்களுக்கு உண்டு. அதே பிடிவாதமே அவர்களுக்கு பலமாகவும் இருக்கும். பார்வையில் எவரையும் மயக்கும் ஆற்றல் இவர்களுக்கும் உண்டு,

கடகம்

தன்னலம் கருதாமல் அடுத்தவருக்கு உதவ ஓடிவருவார்கள். நண்பர்கள், குடும்பத்தினர் நலனில் அதிக அக்கறை காட்டியே அவர்களின் இதயத்தில் இடம்பிடிப்பார்கள். மற்றவர் மீது ஆதீத அன்பு காட்டும் இவர்களுக்கும், பார்வையிலேயே மயக்கும் திறன் உண்டு.

துலாம்

தன்னை சுற்றி ஏதேனும் தவறு நடந்தால் வெகுண்டு எழுந்துவிடுவார்கள். உடனடி தீர்வுக்கு குரல் கொடுப்பார்கள். வலுவான போராட்ட குணம் எங்கு தப்பு நடந்தாலும் போராட வைக்கும். இவர்களும் தன் கூர்மையான பார்வையால் மயக்கிவிடுவார்கள்.

மகரம்

இவர்கள் நம்பகத்தன்மைமிக்கவர்கள். எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள். எந்த சூழல்நெருக்கடியையும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதிர்கொள்வார்கள். இவர்களும் பார்வையால் மயக்கிப்போடுவார்கள்.

You may have missed