இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் என தெரிகிறதா..? சிரிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நாயகி தான்..!

புன்னகை அரசி சினேகா தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே, நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் படத்தில் கவனம் செலுத்தவில்லை. கணவர், குழந்தை என தன் வாழ்வின் பெரும்பகுதியை குடும்பத்துக்காகவே ஒதுக்கினார்.

கடந்த 2000வது ஆண்டில் வெளியான மாதவன் நடித்த ‘என்னவளே’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான சினேகா, தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்தார். இளைய தளபதி விஜயோடு வசீகரா, தல அஜித்தோடு ஜனா, கமலஹாசனோடு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என பல முண்ணனி நடிகர்களோடு நடித்தவர் திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே கடந்த 2012ல் நடிகர், பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2015ல் விகான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இப்போது இரண்டாவதாக கடந்த ஆண்டு, ஜனவரியில் சினேகாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஆத்யந்தா என பெயர்வைத்துள்ளனர். இந்தப்பெயருக்கு ஆதியும், அந்தமும் அற்றவள் எனப்பொருள். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் பட்டாஸ் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாகவும், இன்னொரு தனுஷ்க்கு அம்மாவாகவும் நல்ல நடிப்பை வழங்கியிருப்பார் சினேகா.

இப்போது இரு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் சினேகாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே நம்ம புன்னகை அரசி சினேகாவா இது? என ஆச்சர்யமாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

pic1

pic2

pic3

You may have missed