அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற பல நாள் கனவு நனவாகியது…!பதிவு போட்ட பிரபலம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் அல்டிமிஸ்டார் அஜித் குமார்.இவருக்கு அடுத்ததாக வெளிவர இருக்க கூடிய படம் தான் விடாமுயற்சி.இந்த படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கிய வேளையில் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை எதிர் பார்த்து தல அஜித்தின் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

விடாமுயற்சியை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைதிரி மூவீ மைக்கேர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் இந்த படத்தில் நெகடிவ் கதாபாத்திரம் என தெரிய வந்தது. மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தன்னுடைய x பக்கத்தில் தான் தல அஜித் குமார் சார் உடன் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அதில் என்னுடைய பாசத்திற்குரிய நண்பர்களே இந்த முறை நான் அஜித் சார் படத்தில் நடிப்பது உண்மை தான் எனவும் அஜித் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய பல நாள் கனவு எனவும் மங்காத்தா திரைப்படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை அஜித் சார் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னுடைய பல நாள் கனவு இப்பொது தான் நடந்துள்ளது எனவும் அஜித் சார்ரின் ரசிகர்களும் எனக்கு வாழ்த்துக்கள் சொல்லுகிறார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.