ரசிகர்களிடம் பணத்தை பறிக்க முயலும் பாடகி..!!அது நான் இல்லை… சித்திரா போட்ட பதிவு…

சின்னக்குயில் சித்திரா என்று அழைக்கப்படும் மக்களின் மனம் கவர்ந்த பின்னணி பாடகியான சித்திரா அவர்கள் தமிழில் மட்டுமில்லாமல் பல்வேறுபட்ட மொழிகளில் தன் திறமையை காட்டி படி கிட்டதட்ட 25 ஆயிரம் பாடல்கள் மேல் பாடி அசத்தியுள்ளார்.இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் இருந்து வருகிறார்.

தற்போது இவரின் பெயரில் பண மொடைகள் பல நடந்து வருகிறது. இவரின் பெயரில் பேஸ்புக் அக்கௌன்ட் ஒன்று ஓபன் செய்து சில மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர். அதனால் மக்களை கவனமாக இருக்க கோரி சித்திர அவர்கள் பதிவு ஒன்றை வெளியீட்டுளார்.

அதில் அவர் கூறியதாவது எனது பெயரில் போலியான அக்கௌன்ட் ஓபன் செய்து அதில் நான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தூதர் என்று கூறி இதில் 10 ஆயிரம் போட்டு ஷேர்ஸ் வாங்கினால் ஒரே வாரத்தில் அதன் மதிப்பு 50 ஆயிரம் வரை கூடும் எனவும் என்னை போலவே பேசியுள்ளார்கள் . ஆனால் அது நான் இல்லை இந்த மாதிரி பேசுபவர்களை ஒருபோதும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You may have missed