உதவி செய்வதில் வல்லவர்கள்…யார் ! யார் ! இந்த ராசிக்காரர்கள்…

உதவி என்பது புண்ணியம் என்று கூறப்படும். இல்லாத ஒருவருக்கு உதவும் பொழுது அது புண்ணியத்தில் தான் சேரும். நம்மிடம் இருப்பதை பிறருக்கும் கொடுத்து உதவுவதே நற்குணம். பொதுவாக ஒருவர் பிறந்த நேரம் நட்சத்திரம் ராசி பலன்களை வைத்து அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை எண்ணங்களை கணிபார்கள். அந்த வகையில் ஜோதிட படி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவும் குணம் அதிகமாகவே இருக்குமாம். யார்யார் அந்த ராசிக்காரர்கள் என பார்க்கலாம்.

மீன ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கருணை குணம் உள்ளவர்களாகவும் அடுத்தவர்களின் கஷ்டத்தை கண்டு மிகவும் மனம் வருந்துபவர்களாகவும் இருப்பார்களாம். இவர்களிடம் உதவி கேட்பவர்களுக்கு இல்லை என கூறமாட்டார்களாம். சுயநலம் இல்லாத மனம் உடைய மீன ராசிக்காரர்கள் பொது நலம் உடையவர்களாகவே காணப்படுவார்களாம். இவர்களின் செயல்களை பார்க்கும் பொழுது உதவி செய்வதற்காகவே பிறந்தவர்கள் போல இருக்குமாம்.

அடுத்து கடக ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகவே இருப்பார்களாம். ஒருவர் தனக்கு தீங்கு நினைத்தாலும் அவர்களுக்கு இந்த ராசியில் பிறந்தவர்கள் நல்லதே நினைப்பார்களாம். உதவி கேட்டு வருபவர்களிடம் இல்லை என கூறும் மனது இவர்களுக்கு வராதாம்.

அடுத்து துலாம் ராசி நேர்மைக்கு சிகரம் போனவர்கள் என்று கூறப்படும் துலாம் ராசிகாரர்கள் மிகுந்த ராஜதந்திரம் உடையவர்களாக இருப்பார்களாம். நீதி நேர்மை தவறாத குணம் படைத்தவர்களாக இருப்பார்களாம். எப்போதும் அடுத்தவர்களின் நலனை பற்றி சிந்திக்கும் இவர்கள் இயல்பாகவே உதவும் குணம் கொண்டு இருப்பார்களாம்.