குருவி கொண்ட பார்த்திருக்கோம்… இது என்னடா வித்தியாசமா.. மணமேடையில் மணப்பெண் செய்ததைப் பாருங்க…!

வட இந்தியர்கள் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் பானிபூரியை அவர்களால் விட்டுக்கொடுக்கவே முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் பானிபூரி மீது ப்ரியமாக இருப்பார்கள். அதிலும் வட இந்தியாவில் காதலிக்கு காதலன் பானி பூரி வாங்கிக் கொடுத்து பிரபோஸ் செய்யும் வழக்கமும் இருக்கிறது. நம் ஊர்களில் ஐஸ்க்ரீம் பார்களில் வைத்து காதலை சொல்வது போல் வடக்கே அது பேமஸ்.

வட இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவுதான் பானி பூரி. அங்கே ஆண்,பெண் என அனைவருமே அதன் சுவைக்கு மயங்கிக் கிடக்கின்றனர். சரி என்னதான் பானிப்பூரி ப்ரியராக இருந்தாலும் இப்படியா செய்வார் எனக் கேட்கும் அளவுக்கு ஒரு மணப்பெண் செய்துள்ளார்.

அவர் தன் திருமணத்திற்கு பானிபூரியில் மாலை, பானிபூரி கிரீடம் என பானிபூரி வெறியராகவே மாறியுள்ளார். இதுதொடர்பான பதிவைப் பார்த்துவிட்டு அந்தக் கல்யாணப் பெண்ணை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

You may have missed