திருமணத்தன்று மாப்பிள்ளையை இன்னொரு பெண்ணுக்கு விட்டுக்கொடுத்த பெண்… அதிரவைக்கும் காரணம்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது காதல் திருமணங்களுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். காதல் திருமணம் செய்து பலரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் சிலர் தவறான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து அதே காதலினால் தவித்தும் வருகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் தானிது!

தமிழகத்தின் தஞ்சையை சேர்ந்தவர் சந்தோஷ். தற்போது திருப்பூரில் வேலை செய்யும் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சத்யபிரியா என்ற பெண் மீது காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தஞ்சாவூர் அருகே உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் தன் மகளைக் காணவில்லை என சத்யபிரபாவின் தந்தை போலீஸில் புகார் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து சத்யபிரபாவையும், சந்தோசையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்ததில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த விசயத்தை சொன்னார்கள். திடீரென, போலீஸ் ஸ்டேசனுக்கு அதேபகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண் வந்தார். அவர் தானும், சந்தோஷ்ம் காதலித்ததாகவும், அவரோடு நெருக்கமாக தனிமையில் இருந்ததாகவும் புகைப்பட ஆதரங்களிக் காட்டினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சத்யபிரபா, சந்தோஷ் தனக்கு வேண்டாம் எனவும், அவர் சரண்யாவோடே செல்லட்டும் எனவும் சொல்லிவிட்டு பெற்றோரோடு கிளம்பிப் போனார். இதனைத் தொடர்ந்து போலீஸார் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

You may have missed