தாய்பாசத்தில் மனிதர்களையே மிஞ்சிய மைனா… ஒற்றை ஆளாக காகங்களுடன் போராடி தன் குஞ்சை மீட்ட செயல்..

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் தாய் பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கேயும் அப்படித்தான்…ஒரு பறவை தாய்ப்பாசத்தில் செய்யும் செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

குட்டிப்பறவை ஒன்று நின்று கொண்டிருக்கும் போது இரண்டு காகங்கள் வந்து அதனோடு சண்டையிடுகிறது. காகமானது அந்தக் குட்டிப்பறவையை கொல்லும் நோக்கத்தோடு அதை கொத்துகிறது. இதைக் கவனித்துவிட்ட தாய்பறவை பறந்துவந்து இருகாகங்களையும் பதிலுக்கு கொத்துகிறது. ஒருகட்டத்தில் அந்த தாய்பறவை தன் கூர்மையான அலகால் காகத்தை துரத்தி, துரத்திக் கொத்துகிறது. கடைசியில் குட்டிப்பறவையை விட்டு,விட்டு காகம் பறந்து ஓடிவிட்டது. குறித்த அந்தக் காட்சியை இணையத்தில் 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இஎந்த வீடியோ தாய்ப்பாசத்தின் பெருமையை அப்படியே கண்முன்னே கொண்டுவருகிறது.

You may have missed