போன ஜென்மத்தில் இந்த பூனை கணகுல புலியா இருந்திருக்குமோ.. பிழையின்றி ஓன்று முதல் பத்துவரை கூறும் அதிசய பூனை..

பொதுவாக குரங்கு, நாய், ஆடு, பூனை போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்த பூனைகள் பிடிக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். பூனைகள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கே ஒரு பூனையின் கணித அறிவு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த பூனை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

அந்த பூனைக்கு அபாரமான கணித அறிவு. அந்த பூனையை வளர்க்கும் சிறுமிகள் அதனிடம் ஒன்று என சொன்னதும் அதுவும் ஒன்று என்கிறது. தொடர்ந்து இரண்டு, மூன்று என குழந்தைகள் பத்துவரைச் சொல்ல பூனையும் அதன்படியே சொல்கிறது. போன ஜென்மத்தில் இந்தப் பூனை கணித ஆசிரியராக பிறந்திருக்குமோ என நெட்டிசன்கள் இதில் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்

You may have missed