கண் கருவளையத்தைப் போக்க நீங்களே செய்யக்கூடிய சுலபமான வழிமுறைகள்..

இரவு மற்றும் பகல் நேரங்களில் அதிக நேரம் டிவி , மொபைல் மற்றும் கணினி பார்ப்பதால் கண்களில் கருவளையம் வரக்கூடும். கருவளையத்தை போக்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தேர்வு காணலாம். கருவளையத்தை நீக்க வீட்டிலே செய்யக்கூடிய வழிமுறைகளை கீழே பார்ப்போம்.

முதலில் கருவளையம் வந்தால் அதற்கான காரணத்தை கன்டுபிடிக்க கண்ணாடி முன் நின்று நீங்களே பரிசோதிக்க வேண்டும்.

கண்ணின் மேல் புற தோலை விரல்வைத்து இழுத்து பார்த்தல் , வெண்மையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கருவளையம் ஏற்பட்டிருக்கும். அதுவே கருப்பு நிறங்கள் இருந்தால் மரபணு மாற்றத்தால் ஏற்பட்ட கருவளையமா இருக்க கூடும்.

கருவளையத்தை போக்க சில மருத்துவ குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற தாமரை இதழ்களை பறித்து அரைத்து அதன் விழுதின் ரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

அதிகாலை குளிக்கும் முன்பும் மற்றும் இர்வரு தூங்கும் முன்பும் கண்களை சுற்றி நன்கு தடவி அரைமணிநேரம் கழித்து கழுவி வர கருவளையம் குணமாகும்.

கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதனுடன் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் ஆகியவற்றை நன்கு கலந்து இரண்டு மணி நேரம் திறந்து வைக்க வேண்டும்.

பின்பு , அதனை எடுத்து தினமும் குளிக்கும் முன் மற்றும் தூங்கும் மின் கண்களை சுற்றி தடவி, ஒரு அரைமணி நேரம் கணைகளை மூடி ,பின்பு கழுவிவிடலாம்.

சிலருக்கு கண்களுக்கு கீழ் சதை போல் தோன்றி, அவர்களின் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இதனை போக்க பதம் ஆயில் 2 சொட்டு , விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா நன்கு இழுத்துப் பிடித்து, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு கண்ணுக்கும் 10 – 15 தடவை மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.

You may have missed