தலைநகரம், நான் அவன் இல்லை பட நாயகி ஜோதிர்மயியா இது.. என்னாச்சு? புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

தமிழ்த்திரையுலகில் தன் ரம்மியமான நடிப்பினால் சில காலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஜோதிர்மயி. இயக்குனர் சுந்தர்சி நடித்த தலைநகரம் படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தவர். அதிலும் நடிகர் வடிவேலுவை பார்த்ததுமே இவர் மயங்கி விழும் காட்சி அந்தநேரத்தில் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது.

தொடர்ந்து நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் படங்களிலும் நடித்திருந்தார் ஜோதிர்மயி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளத்திலும் பிஸியாக இருந்த இவர் கடந்த 2004ல் நிஷாந்த்குமார் என்பவரைக் கல்யாணம் செய்தார். இவர்களுக்குள் கருத்து முரன்பாடு ஏற்பட்டு கடந்த 2011ல் முறையாக விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து கடந்த 2015ல் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அமல்நீரத் என்பவரைக் கல்யாணம் செய்தார்.

இந்நிலையில் ஜோதிர்மயியின் கணவர் அமல்நீரத், ஜோதிர்மயியின் புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஜோதிர்மயிக்கு என்ன ஆச்சு? தலை முடி நரைத்து இப்படி மாறிட்டாரே என அதிர்ச்சியோடு கேட்டுள்ளனர். புகைப்பட இணைப்பு கீழே..

pic1

pic2

You may have missed