மிஸ்டு காலால் மலர்ந்த காதல்… ரொமான்ஸ் முற்றி நேரில் சென்று பார்த்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..!

முன்பெல்லாம் ஊரில் கோயில் திருவிழாக்களிலும், பள்ளி, கல்லூரிக்கு போகையிலும் தான் இலம் பெண்களின் தரிசனம் கிடைக்கும். ஆனால் இன்று பேஸ்புக், வாட்ஸப் என காதலிக்கும் களங்கள் விரிந்துள்ளது. ஆனால் இப்படியான சூழலிலும் மிஸ்டுகாலில் காதலிக்க போனவருக்கு, காதலியை நேரில் சந்தித்த போது மயக்கம் வராத குறைதான்.

இந்த சம்பவம் கேரளத்தில் நிகழ்ந்துள்ளது. கேரளத்தின் கண்ணூரை சேர்ந்த மணமுடிந்து, குழந்தைகள் எல்லாம் உள்ள பெண் ஒருவருக்கு மிஸ்டுகால் வந்துள்ளது. எதிர்முனையில் ஆண் ஒருவர் பேசியிருக்கிறார். இருவரும் நாள்பட பேசிப்பேசொ ஒருவர் மீது, ஒருவர் காதல் வயப்பட்டனர். ஒருகட்டத்தில் தன் வீட்டில் யாரும் இல்லை என ஒரு தேதியை சொல்லி காதலிக்கு அழைப்பு விடுத்தார் காதலன்

திருமணம் முடிந்த கணவனை வேலைக்கும், பிள்ளைகளை ஸ்கூலுக்கும் அனுப்பி வைத்துவிட்டு அந்த பெண்காதலன் சொன்ன முகவரிக்கு போய் கதவைத்தட்ட, 11ம் வகுப்பு படிக்கும் பையன் ஒருவன் வந்து கதவை திறந்திருக்கிறான்.

அந்த பெண் காதலனின் பெயரைச் சொல்லி கேட்க, அதுநான் தான் என சொல்லியிருக்கிறான் மாணவன். தொடர்ந்து, காதலி தன் பையரைச் சொல்ல…தான் ஏதோ தன் வயதை ஒத்த சின்ன பிள்ளையை காதலிப்பதாக நினைத்த மாணவன் பதட்டத்தில் ஓவென கத்தி இருக்கிறான்.

தன்னிடம் போனில் பேசியது பொடியனா என அந்த பெண்ணும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இதனிடையில் அக்கம்,பக்கத்தினர் வந்து இதுகுறித்து விசாரித்து இருவருக்கும் அறிவுரை சொல்லி அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

You may have missed