சூப்பர் வேலை கிடைச்சிருச்சு…இனிமேல் நோ வீடியோ… மும்பையில் செட்டில் ஆகும் பாடகி சுசித்ரா…!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் பாடகி சுசித்ரா. இவர் பாடகி மட்டும் அல்ல நடிகையும் கூட. இவர் 1500 க்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர் எழுத்தாளரும் ஆவார். இவர் பல படங்களிலும் துணை கதா பாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்த்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மீது ஏற்பட்ட சர்ச்சையின் காரணமா பட வாய்ப்புகளை இழந்துள்ளார். மேலும் இவர் பல சினிமா நட்சத்திரங்களை விமர்சித்து பேசியுள்ளார்.

மேலும் இவரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பல சினிமா பிரபலங்களின் அந்தரங்க காட்சிகள் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்கள் வெளியாகியிருந்தது. அது மிகவும் சர்ச்சை ஆனது.மேலும் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதனை தான் வெளியிடவில்லை எனவும் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் தான் அதனை வெளியிட்டிருந்தார் எனவும் கூறி இருந்தார். மேலும் கார்த்திக்கு இந்த மாதிரி போட்டோஸ் மற்றும் வீடியோஸ்களை நடிகர் தனுஷ் தான் கொடுத்ததாகவும் கூறி இருந்தார். அதற்க்கு கார்த்திக் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கபட்டிருந்தது. மேலும் சுசித்ரா மனநலம் பாதிக்க பட்டிருக்கிறார் எனவும் அதனால் தான் இந்த மாதிரி எல்லாம் பேசுகிறார் எனவும் கார்த்திக் கூறி இருந்தார்.

மேலும் இவர் பல நேர்காணல்களில் பிரபலங்களை நேரடியாக விமர்சித்தும் பேசியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் மும்பையில் குடியேற போவதாகவும் மேலும் தனக்கு நல்ல வேலை கிடைத்து விட்டதாகவும் இனிமேல் தான் எந்த வீடியோவும் போட மாட்டேன் எனவும் 80 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவரும் ஒரு குழந்தைகள் பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் இதற்க்கு முன்பு பேசிய வீடியோஸ் அனைத்தும் உண்மை எனவும் அதனை தான் நீக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.