குதிரை, பாம்பு, நரி, சிங்கம், பாம்பு இவைகள் கனவில் வருகிறதா.. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

தூக்கம் தான் இந்த உலகில் மிகப்பெரிய வரம். என்னதான் கோடி, கோடியாக பணம் இருந்தாலும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இங்கே பலர் உண்டு. தூக்கமாத்திரை போட்டால்தான் அவர்களுக்கு நித்திரை வரும். தூக்கம் அவ்வளவு விலைமதிப்புள்ளது. அந்தத் தூக்கத்தில் கனவு வராதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்.

தூக்கத்தில் வருவதல்ல கனவு. நம்ம தூங்கவிடாமல் வருவதுதான் கனவு என்றார் அப்துல்கலாம். நம் ஆழ்மனக் கற்பனைகள் தான் கனவுகள் எனப்படுகிறது.அதேநேரம் நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் பலன் உண்டு. கனவில் விலங்குகள் வந்தால் என்ன அர்த்தம் எனப் பார்ப்போம் வாருங்கள்..

கிளி..

கிளிகள் பறந்து மரம்விட்டு மரம் செல்வதை போல கனவுவந்தால் பழைய நண்பர்களை சந்தித்து உரையாடுவோம் என அர்த்தம்.

பறவைகள்..

வானில் கூட்டமாக பறவைகள் செல்வதைப்போல கனவு வந்தால் நெடுநாள் துன்பம் விலகப்போவதாக அஎத்தம். புகழ் கூடும். புதிய பதவிகளும் ஓடி வரும்.

மயில்..

மயில் அகவும் கனவுவந்தால் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். மனைவியோடு அன்னியோன்யம் உருவாகும்.

யானை..

ஏதோ ஒரு வகையில் பெருஞ்செல்வம் கிடைக்கும் என்பதன் அர்த்தம் தான் கனவில் யானை வருவது! யானை மீது தோரணையாக உட்கார்ந்து சவாரி செய்வதுபோல் கனவுவந்தால் உயர் பதவி கிடைக்கும். சொந்தவீடு வாங்கும் பாக்யம் உண்டாகும்.

நாய்..குரங்கு..

நாய் குரைக்கும் கனவுவந்தால் வீண்பழி உண்டாகும். கனவில் குரங்கு வந்தால் வீட்டிலோ, நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். கடல் தொல்லை கூடும்.ஆடு கனவில் வந்தால் பைக்கோ, காரோ வாங்கப்போவதாக அர்த்தம். காளைமாடு துரத்தும் கனவு வந்தால் வீண் பிரச்னை தீரும். மேய்ச்சல் நிலத்தில் பசு மேய்வதை போல் கனவு வந்தால் புதிய சொத்து வாங்குவோம்.

குதிரை..

குதிரை கனவில் வந்தால் வழக்கில் ஜெயிப்போம் என அர்த்தம். குதிரை சவாரி செய்வதுபோல் கனவுவந்தால் வெளிநாட்டு யோகம் உண்டென்று அர்த்தம்.

முயல்..

துள்ளிக்குதித்து முயல் விளையாடும் கனவு வந்தால் உறவுகளை சந்திக்க சொந்த ஊருக்கு செல்வோம் என அர்த்தம். அல்லது உறவுகள் நம்மை பார்க்க வருவார்கள் என அர்த்தம்.நரி கனவில் வந்தால் சொந்த ஊரைவிட்டு நகர்ந்து வெளியூர் செல்லப் போகிறோம் என அர்த்தம்.

புலி..சிங்கம்..

புலி, சிங்கம் போன்ற வீரமான விலங்குகளை நாம் வேட்டையாடி ஜெயிப்பதுபோல் கனவுவந்தால் நமக்கு வரும் எதிர்ப்புகளை முறியடித்து வெல்வோம் என அர்த்தம். பாம்பு கனவில் வந்தால் கடன் தொல்லை அகலும் என அர்த்தம்.

You may have missed