ஒ சொல்றியா மாமா பாடலுக்கு உடலை வளைத்து ஆட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. வெட்கத்தில் மாப்பிள்ளை செய்ததை பாருங்க..

திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இங்கே மணமகளே செம குத்தாட்டம் போட்ட சம்பவம் வைரல் ஆகிவருகிறது.

அண்மையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியாகி பட்டையைக் கிளப்பியத் திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலும் வேற லெவலில் ஹிட் அடித்தது. இங்கே திருமண ஊர்வமாக வந்த கல்யாணப் பொண்ணும், மாப்பிள்ளையும் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஓ சொல்றியா மாமா பாடல் போடப்பட, உற்சாக மிகுதியில் கல்யாணப் பொண்ணு செம குத்தாட்டம் போட்டுவிட்டார். ஒருகட்டத்தில் மாப்பிள்ளையும் சேர்ந்து ஆடினார். ஆனால் கல்யாணப் பெண் நிற்காமல் ஆடிக்கொண்டே இருக்க, மாப்பிள்ளை அவரை கையைப் பிடித்து இழுத்து மண்டபத்திற்குள் கூட்டிச் சென்றார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

You may have missed