இப்படி மகன்கள் கிடைக்க இந்த அம்மா கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. வீடியோ பாருங்க, புரியும்…

‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!

மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.

எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் ஒரு பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அதை அப்படியே கண் முன்பு கொண்டுவந்து நிறுத்துவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வட இந்தியாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு மகன் தன் வயதான தாய் உள்பட மொத்தக் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு சுற்றுலா சென்றார். அப்போது அந்த குடும்பம் உயரமான ஒரு இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த தொலைநோக்கி மூலமாக அந்த இடத்தின் கொள்ளை அழகைப் பார்த்து ரசித்தனர். ஆனால் வீட்டில் மூத்தவரான வயதான பாட்டியால் அதை எட்டிப் பார்க்க முடியவில்லை. தன் தாயால் அதை ரசிக்க முடியாததைப் பார்த்த மகன், உடனடியாக தன் அம்மாவைத் தூக்கி அந்த தொலைநோக்கியில் கண் வைத்து பார்க்கச் சொல்கிறார். எத்தனையோ விசேசங்களிலும், திருவிழாக்களில் சாமி வரும்போதும் தன் இடுப்பில் தூக்கிவைத்துப் பார்த்த தாயை, இப்போது தொலைநோக்கியைப் பார்க்க தானே தூக்கிக் காட்டுகிறார் மகன். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்கள்.

You may have missed