தாமிரபரணி நடிகை பானுவுக்கு இவ்வளவு பெரிய மகளா..? இணையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

கற்பூர நாயகியே கனகவள்ளிப் பாடலை உட்லாப் செய்து, கருப்பான கையால என்னை பிடிச்சா என பாட்டெழுத அந்த பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்த மெகா ஹிட் பாடலுக்கு விசாலோடு தாமிரபரணி படத்தில் ஆட்டம் போட்ட நடிகை பானுவை நினைவில் இருக்கிறதா? அவரது அறிமுகப்படமே அதுதான்.

அதேபடத்தில் இடம்பிடித்த தாலியே தேவையில்லை பாடலும் ஹிட் அடித்தது. அதன்பின்னர் தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பானுவுக்கோ தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து தமிழில் அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர் உள்பட சிலபடங்களில் நடித்தார். ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் தன் கவனத்தை மலையாளத் திரையுலகு பக்கம் திருப்பினார். கடந்த 2015ல் பிரபல மலையாள பாடகி ரிமிடோமியின் சகோதரர் ரிங்கு டோமியை கல்யாணம் செய்தார் நடிகை பானு.

இந்த தம்பதிக்கு இப்போது 5 வயதில் அழகிய பெண் குழந்தை உள்ளது. கியாரா என அந்த குழந்தைக்கு பெயர். நடிகை பானு இப்போது கொச்சியில் அழகுநிலையம் ஒன்று நடத்தி வருகிறார். திருமணத்திற்கு பின்பு தமிழில் பாம்பு சட்டை, வாய்மை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இப்போது அவரது கணவர், மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே சின்ன பொண்ணாக பார்த்த பானுவின் மகளா இது என கமெண்ட் செய்துவருகின்றனர்.புகைப்பட இணைப்பு கீழே

pic1

pic2

pic3

You may have missed