கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் அதிகபட்ச விசயம் இதுதான்… இதைமட்டும் செய்யுங்க..லைப் ஸ்மூத்தா போகும்..!

கணவன், மனைவி உறவு என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. காலம் முழுவதும் உடன் வரும் பந்தம் அதுதான். அதேநேரம் கணவன், மனைவி உறவை ஸ்மூத்தாக கொண்டு செல்வதே ஒரு கலை. பலரும் அதில் கோட்டை விடுவதால் தான் விவாகரத்தாகி பிரிந்து விடுகின்றனர்.

இதோ இந்தப் பதிவில் கணவன், மனைவி உறவுக்கு உரம் சேர்க்கும் சில முக்கிய விசயங்களைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு மனிதனின் வாழ்வு எப்போது முழுமையடையும் என்றால் அவருக்கு நல்ல மணவாழ்க்கை கிடைக்கும்போதுதான். அப்போதுதான் ஒரு ஆணின் வாழ்வும் முழுமையடைகிறது. பொதுவாக மணவாழ்க்கை சிறக்க மூன்று விசயங்கள் மட்டும் போதும்.

பொதுவாகவே பெண்கள் ஆணிடம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பதே அன்புதான். அந்த அன்பைப் பொழிந்து, மனைவிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இயங்கினாலே மனைவிகள் கணவர்களிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்கள். மனம் விட்டு மனைவியிடம் பேசுங்கள். அவர்கள் லைட்டாக சோர்ந்துபோய் படுத்தாலே.அய்யோ என்னில் சரிபாதியல்லவா நீ..என் செல்லத்துக்கு என்ன ஆச்சுன்னு அன்பு மழை பொழியுங்கள்.

அதன் பின்னர் உங்களுக்கேத் தெரியும். ரிசல்ட்! சின்னதா ரசம் வைத்தால் கூட அடடே உன் கையால் சாப்பிடுற ரசம்கூட வேற லெவல் என சொல்லிப் பாருங்கள். உன்னை ஒருநாள் கூட அழ வைக்கக் கூடாதுன்னு தான் ஓடிக்கிட்டே இருக்கேன் செல்லமே என அவ்வப்போது வார்த்தையைப் போடுங்கள். அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கையும் சோ ஸ்வீட்டா நகரும்!

You may have missed