புஷ்பா பட அல்லு அர்ஜூன் ஸ்டெப்பை அப்படியே செம க்யூட்டாக போட்ட குட்டி தேவதை… பல லட்சம் பேர் மனதைக் கவர்ந்த காட்சி..

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அப்ப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? டிவியில் புஷ்பா திரைப்படம் ஓடிக்கொண்டிருருந்தது. அதில் பேரே கல்யாணி ராகமா பாடல் வந்தது. அதைப் பார்த்ததும் அதுவரை அமைதியாக டிவி பார்த்துக் கொண்டிருந்த குட்டிதேவதை, புஷ்பா பட அல்லு அர்ஜூன் ஸ்டைலிலேயே தன் தோளைச் சரித்து ஆடத் தொடங்கியது. இந்தக் குட்டிக்குழந்தையின் புஷ்பா ரெஸ்பான்ஸ் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

You may have missed