பிக் பாஸ் சீசன்8 முதல் நாளிலே கேள்வியில் ஆரம்பித்தார் RJ ஆனந்தி…! விஜய் சேதுபதி சொன்ன பதில்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. சீசன் 7 வரை தொகுப்பாளராக நடிகர் கமலகாசன் நடத்தி வந்தார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகியதால். தற்போது சீசன் 8 நடத்துவதற்கு நடிகர் விஜய் சேதுபதி களம் இறங்குகிறார்.

பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ள விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டி யாளர்களையாக அறிமுகம் செய்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். அப்போது போட்டியாளராக மேடைக்கு வந்த RJ அனந்தி தொகுப்பாளர் விஜய் சேதுபதியை பார்த்து கேள்வி ஒன்றை வினவினார். அதாவது நீங்கள் நெகட்டிவிட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள் என கேட்டார்.

அதற்க்கு விஜய் சேதுபதி சமீபத்தில் சினிமாவில் இருக்கும் நண்பர் ஒருவரை சந்தித்ததாகவும் அவருடன் நான் பழகிய பிறகுதான் அவர் என்னை தவர்க நினைத்துள்ளார் நானும் அவரை தவறாக நினைத்துள்ளேன். இவ்வாறு 10 வருடம் சென்று விட்டதாகவும் நேரில் பார்க்கும் பொழுது மட்டும் நல்லா இருக்கீங்களா நீங்க நல்லா இருக்கீங்களா என வெளிப்படையாக நடித்துள்ளோம் எனவும் இப்பொது 2-3 மாதம் பழகிய பிறகுதான் எனக்கு அது தெரிய வந்து எனவும் என்னை ஒருவர் தவறாக நினைத்தால் நான் சென்று ஒவ்வொருவருக்காக என்னை அவர்களிடம் பழகி prove செய்துகொண்டு இருக்கமுடியுமா வாழ்கை ரொம்ப சிறியது ஒவொருவரிடமும் நான் இப்படித்தான் என prove பண்ண முடியாது என பதில் கூறினார்.