உங்கள் வெள்ளை முடி கருப்பாக வேண்டுமா? இதை செய்யுங்க போதும்..!

முன்பெல்லாம் வயோதிகர்களை மட்டுமே தாக்கிய நரைமுடி பிரச்னை இப்போது இளைய தலைமுறையையும் விட்டுவைக்கவில்லை. எல்லாரும் இதை மறைக்க டை அடிக்கத் துவங்கி விடுகின்றனர். ஆனால் இது தேவையே இல்லாதது. இதற்கு மாற்றாக இயற்கையான முறையிலேயே நரைமுடியை கருப்பாக்கிவிட முடியும்.

அது குறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள். ‘’இதற்கு விளக்கெண்ணெய், பாதாம் ஆயில், வெந்தயப்பொடி ஆகியவையே போதும். ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் வெந்தயப்பொடியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனோடு தலா ஒரு ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணெய், பாதாம் ஆயிலை சேர்க்க வேண்டும். இதை மூன்றையும் பேஸ்ட் பதத்துக்கு வருவதுபோல் நன்றாக கலக்க வேண்டும்.

இதில் பாதாம் ஆயில் இல்லாவிட்டால் தேங்காய் எண்ணெயை சேர்க்கலாம். இதில் வெந்தயம் நமது முடியை இயல்பாக மெயிண்டையின் செய்ய உதவுகிறது. விளக்கெண்ணெய் நரை முடி வராமல் தடுக்கிறது.நாம் வழக்கமாக தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் இதைக் கலந்தும் பயன்படுத்தி நம் முடியை கருமையாகவே பராமரிக்க இயலும்

இதில் நாம் சேர்த்திருக்கும் வெந்தயப்பொடி பொடுகையும் நீக்கும்.இதில் நாம் சேர்த்திருக்கும் பாதாம் ஆயிலில் அதிக அளவில் விட்டமின் இ இருக்கிறது. இதில் புரோட்டீனும் உள்ளது.இந்த கலவையை நாம் தலைக்கு குளிப்பதற்கு முன்னர் தேய்த்து, இரு மணி நேரங்களுக்கு பின் குளித்தால் நல்ல பலன் தரும். முயற்சித்து பாருங்கள் நண்பர்களே…உங்கள் நரைமுடி வெள்ளையாகும். .

You may have missed